என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 6 மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்
கபிஸ்தலம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவிரியாற்றில் கடந்த 19-ந்தேதி நீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் ஆறுதல் கூறினர்.
கபிஸ்தலம் கிராமம், சீதா லெட்சுமிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 17), வெங்கடேஷ் (18), விஷ்ணுபிரசாத் (13), ஸ்ரீநவீன் (14), கதிரவன் (18), சிவபாலன் (15) ஆகிய 6 மாணவர்கள் கபிஸ்தலம் பாலக்கரை அருகே காவிரியாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த அமைச்சர் துரைக்கண்ணு இறந்த மாணவர்களின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சர் நிவாரண நிதி உதவித்தொகை கிடைக்கப் பெறுவதற்கு கலெக்டர் மூலமாக பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பாரதிமோகன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர்மோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கோபிநாதன், சூரியநாராயணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்