search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே மின்வாரிய அதிகாரியை தாக்கிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
    X

    தேன்கனிக்கோட்டை அருகே மின்வாரிய அதிகாரியை தாக்கிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    தேன்கனிக்கோட்டை அருகே மின்வாரிய அதிகாரியை தாக்கியது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி பகுதியை சேர்ந்தவர் மாயவன். இவர் அஞ்செட்டி மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    கோட்டையூர் அடுத்துள்ள மட்டியூர் தொட்டி கிராமத்தில் டிரான்ஸ்பாரம் பழுது ஏற்பட்டது. இதனை மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரி மாயவன் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் அங்கு சென்றனர். புதிய டிரான்ஸ்பாரம் மாற்றுவதால் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் புதிய டிரான்ஸ்பாரம் பொருத்தும் பணி நடந்தது. அப்போது மின்வாரிய அதிகாரி மாயவனுக்கு போன் வந்தது.

    அஞ்செட்டி அடுத்துள்ள பாண்டுரெங்கம்தொட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் எங்கள் பகுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் உடனே நீங்கள் மின்சாரத்தை வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினார். மின்வாரிய அதிகாரி மாயவன் தற்போது மட்டியூர் தொட்டி பகுதியில் புதிய டிரான்ஸ்பாரம் மாற்றப்பட்டு வருகிறது.

    அதனால் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று கூறினார். பின்னர் சிறிது நேரத்தில் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு தகாத வார்த்தையால் மாயவனை திட்டினார்.

    கிருஷ்ணன் நீங்கள் உடனே மின்சாரத்தை வினியோகம் செய்யாவிட்டால் உன்னை வேலையை தூக்கி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    நீங்கள் யார் என்று கேட்ட போது நான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரமுகராக இருக்கிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்துள்ளார்.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரி மாயவன் வீட்டிற்கு நேற்று மதியம் கிருஷ்ணன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் உடன் வந்த பழனி, சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து மாயவன் வீட்டின் ஜன்னல் மீது செங்கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். இதை கண்ட பொதுமக்கள் சமாதானம் செய்தனர். இதில் மாயவன் மற்றும் தனது மகள் கோமதி ஆகிய 2 பேர் மீதும் செங்கற்களை வீசி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவரை மீண்டும் அங்கு சென்று கிருஷ்ணன், பழனி, சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரும் சென்று தாக்கியுள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாயவன், கோமதி ஆகிய 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மாயவன் அஞ்செட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அஞ்செட்டியை சேர்ந்த கிருஷ்ணன், பழனி, சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×