search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
    X

    தருமபுரி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

    தருமபுரி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    தருமபுரி:

    தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் சிவானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, தருமபுரி நகரத்திற்குட்பட்ட பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஹள்ளி, ரெயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஹள்ளி, விருபாட்சி புரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் ராஜாப்பேட்டை, வெள்ளோலை, சோலைக் கொட்டாய், முக்கல் நாய்க்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், கடகத்தூர், மூக்கனூர், பழைய தருமபுரி, குண்டல்பட்டி, கிருஷ்ணாபுரம், இண்டமங்கலம், கன்னிப் பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×