search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
    X

    பாப்பம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

    பாப்பம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ளது பாப்பம்பட்டி. இங்குள்ள ஜானகி நகரில் உள்ளது விநாயகர் கோவில். நேற்று இரவு பூஜைகளை முடித்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை சிறப்பு வழிப்பாட்டுக்காக பக்தர்கள் மற்றும் பூசாரி கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலில் இருந்த வேலால் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உண்டியலை பார்த்தபோது அதில் இருந்த காணிக்கை பணம் அனைத்தும் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும், இந்த ஆண்டு சுற்றுச்சுவர் கட்ட உண்டியல் திறப்படாமல் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். அதில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் காணிக்கை இருந்திருக்கும் என்று கூறினார்.

    Next Story
    ×