search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் வழக்கு- கைதான 6 பேருக்கு 31-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
    X

    குட்கா ஊழல் வழக்கு- கைதான 6 பேருக்கு 31-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

    குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்தி நீதிபதி உத்தரவிட்டார். #Gutka
    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இவர்களது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்கள் 6 பேரும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்ற காவலை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஜவகர் உத்தரவிட்டார். #Gutka
    Next Story
    ×