என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே போதையில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (வயது19). என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சரியாக செல்லாததால் அவரை தந்தை செல்வராஜ் கண்டித்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் சந்தோசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் செல்வராஜ் தனது மகன் சந்தோசை கல்லூரியில் இருந்து நிறுத்தி விட்டு கோவைக்கு வேலைக்கு அனுப்பி விட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சந்தோஷ் தனது ஊருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஆனந்தராஜ் குடிபோதையில் சந்தோசை பிளேடு கத்தியால் உடலில் பல இடங்களில் குத்தினார்.
படுகாயம் அடைந்த சந்தோஷ் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்