search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயல்படாத ரஜினிமன்ற நிர்வாகிகள் திடீர் நீக்கம் - புலனாய்வு குழு நடவடிக்கை
    X

    செயல்படாத ரஜினிமன்ற நிர்வாகிகள் திடீர் நீக்கம் - புலனாய்வு குழு நடவடிக்கை

    ரஜினி மக்கள் மன்றத்தில் செயல்படாத நிர்வாகிகள் குறித்து புலனாய்வு குழு விசாரணை நடத்தி புதிய நிர்வாகிகளை நியமிக்க பரிந்துரை செய்கின்றனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடந்து வருவதையொட்டி புகார் வரும் நிர்வாகிகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ரஜினி மக்கள் மன்றத்தில் புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகள் சுதாகர், இளவரசன், ஸ்டாலின் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறார்கள்.

    இந்த புலனாய்வு குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் ரகசியமாக சென்று மக்கள் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்கள்.

    இவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்பதில்லை, மாறாக உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிர்வாகிகளின் செயல்பாடு பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார்கள். நிர்வாகிகள் மீது பொதுமக்கள் புகார் கூறும் பட்சத்தில் உடனடியாக நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

    சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த புலனாய்வு குழுவினர் மக்களிடம் கருத்துக்களை கேட்டு பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த அமலன், கவுரவ செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளராக இருந்த தங்கம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு மாற்றப்படுகிறார்கள்.

    ரஜினி ரசிகர்களாக இருந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களை சந்தித்து பேசி அனைவரையும் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram

    Next Story
    ×