என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்
Byமாலை மலர்14 Oct 2018 4:36 AM GMT (Updated: 14 Oct 2018 4:36 AM GMT)
வண்டலூர் ரெயில் நிலையம் அருகே கணவருடன் தூங்கிய இளம்பெண்ணை கடத்தி மர்மகும்பல் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #VandalurWomanMolested
செங்கல்பட்டு:
வண்டலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இருவரும் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தனர்.
மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு போதையில் தூங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு மணிகண்டன் வழக்கம் போல் மது போதையில் மனைவி விஜயலட்சுமியுடன் தூங்கினார்.
நள்ளிரவில் அவ்வழியே வந்த மர்ம கும்பல் சாலையோரத்தில் தூங்கிய விஜயலட்சுமியை கற்பழிக்க திட்டமிட்டனர். அவர்கள் விஜயலட்சுமியை மிரட்டி அங்கிருந்து தூக்கி கடத்தி சென்றனர்.
மணிகண்டன் போதையில் இருந்ததால் மனைவியின் அலறல் சத்தம் அவருக்கு கேட்கவில்லை.
இதையடுத்து ரெயில் நிலையம் அருகே உள்ள முட்புதருக்குள் விஜயலட்சுமியை மர்ம கும்பல் தூக்கி சென்றது. பின்னர் அவர்கள் மாறி, மாறி விஜயலட்சுமியை கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதனால் அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை.
இதற்கிடையே அதிகாலையில் எழுந்த மணிகண்டன் அருகில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அப்பகுதியில் தேடிய போது முட்புதருக்குள் விஜயலட்சுமி உயிருக்கு போராடியபடி கிடப்பது தெரிந்தது.
அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கற்பழிப்பில் ஈடுபட்டது 3 பேர் கும்பல் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
வண்டலூர் பாலாற்றின் கீழ் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா கும்பல் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. எனவே போதையில் இருந்த கும்பல் விஜயலட்சுமியை கற்பழித்து கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனிடமும் விசாரணை நடக்கிறது.
மணிகண்டன்- விஜயலட்சுமியின் சொந்த ஊர் கடலூர் ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். #VandalurWomanMolested
வண்டலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இருவரும் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தனர்.
மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு போதையில் தூங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு மணிகண்டன் வழக்கம் போல் மது போதையில் மனைவி விஜயலட்சுமியுடன் தூங்கினார்.
நள்ளிரவில் அவ்வழியே வந்த மர்ம கும்பல் சாலையோரத்தில் தூங்கிய விஜயலட்சுமியை கற்பழிக்க திட்டமிட்டனர். அவர்கள் விஜயலட்சுமியை மிரட்டி அங்கிருந்து தூக்கி கடத்தி சென்றனர்.
மணிகண்டன் போதையில் இருந்ததால் மனைவியின் அலறல் சத்தம் அவருக்கு கேட்கவில்லை.
இதையடுத்து ரெயில் நிலையம் அருகே உள்ள முட்புதருக்குள் விஜயலட்சுமியை மர்ம கும்பல் தூக்கி சென்றது. பின்னர் அவர்கள் மாறி, மாறி விஜயலட்சுமியை கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதனால் அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை.
இதற்கிடையே அதிகாலையில் எழுந்த மணிகண்டன் அருகில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அப்பகுதியில் தேடிய போது முட்புதருக்குள் விஜயலட்சுமி உயிருக்கு போராடியபடி கிடப்பது தெரிந்தது.
அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கற்பழிப்பில் ஈடுபட்டது 3 பேர் கும்பல் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
வண்டலூர் பாலாற்றின் கீழ் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா கும்பல் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. எனவே போதையில் இருந்த கும்பல் விஜயலட்சுமியை கற்பழித்து கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனிடமும் விசாரணை நடக்கிறது.
மணிகண்டன்- விஜயலட்சுமியின் சொந்த ஊர் கடலூர் ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். #VandalurWomanMolested
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X