search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் அட்டை- புரோக்கர் கைது
    X

    திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் அட்டை- புரோக்கர் கைது

    திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுக்க உதவிய புரோக்கரை கைது செய்த போலீசார் ஜார்க்கண்ட் வாலிபரை தேடி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமத் தோட்டத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்கதேச வாலிபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் போலி ஆதார் கார்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு கார்டு தயாரிக்க ரூ. 6 ஆயிரம் கொடுத்தது தெரிய வந்தது.

    கைதான 8 பேரிடம் விசாரித்த போது திருப்பூரை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் அவினாசியில் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வர்மா என்பவர் தான்போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து புரோக்கர் மற்றும் வர்மாவை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த வர்மா ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டார்.

    இந்த நிலையில் புரோக்கர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது திருப்பூரில் தங்கி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வர்மாதான் போலி ஆதார் கார்டு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளை தயார் செய்து கொடுத்ததாக கூறினார்.

    இதனை தொடர்ந்து வர்மாவை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படையினர் ஜார்க்கண்ட் விரைந்துள்ளனர்.

    வர்மாவை பிடித்து அவர் வைத்துள்ள கம்ப்யூட்டரை சோதனை செய்தால் தான் அவர் எத்தனை பேருக்கு போலியாக ஆதார், அடையாள அட்டை தயாரித்து கொடுத்தார் என்பது தெரிய வரும். #tamilnews
    Next Story
    ×