search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake Aadhaar card"

    திருப்பூரில் போலி ஆதார் கார்டு அச்சடிக்க உதவிய மேலும் ஒரு பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார். #Aadhaarcard

    திருப்பூர்:

    திருப்பூர் செவாந்தம் பாளையம் சாமந்த தோட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா (34) என்பவர் அச்சடித்து கொடுத்தார் என கூறி இருந்தனர்.

    அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா சென்ற தனிப்படை போலீசார் ராம்சிஷ் வர்மாவை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து லேப்-டாப், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய கூடிய கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அவருக்கு உதவியாக இருந்த அவினாசி ரங்கா நகரை சேர்ந்த சவரிமுத்து (54) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    அவர்கள் இருவரிடமும விசாரணை நடத்திய போது திருப்பூர் சங்கேரி பாளையத்தில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த ரவிசங்கர் சிங் (28) என்பவர் தான் தங்களுக்கு போலி ஆதார் கார்டு தொடர்பாக ஆட்களை அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து ரவிசங்கர் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறும் போது, வட மாநில வாலிபர்களை போலி ஆதார் கார்டு மூலம் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தியதாக தெரிவித்தார்.

    ரவிசங்கர் சிங் மூலம் போலி ஆதார் கார்டு பெற்று திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வட மாநில வாலிபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வங்கதேச வாலிபர்கள் வேறு யாராவது உரிய ஆவணங்கள் இன்றி தங்கி உள்ளார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. #Aadhaarcard

    திருப்பூரில் வங்கதேச வாலிபர்கள் 500 பேருக்கு போலி ஆதார் அட்டையை தயாரித்து கொடுத்ததாக பீகார் வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Aadhaarcard

    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமந்த தோட்டத்தில் எந்த ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 8 பேரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா (34) அச்சடித்து கொடுத்தார் என கூறி இருந்தனர்.

    ஒரு ஆதார் அட்டைக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர். இதனை தொடர்ந்து ராம்சிஷ் வர்மாவை பிடிக்க திருப்பூர் போலீசார் அவினாசி சென்றனர். போலீசார் வருவதை அறிந்த ராம்சிஷ் வர்மா தலைமறைவாகி விட்டார்.

    அவர் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா சென்ற தனிப்படையினர் ராம்சிஷ் வர்மாவை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப் -டாப், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய கூடிய கருவிகளை போலீசார் கைப்பற்றினார்கள்.

    ராம்சிஷ் வர்மாவுக்கு வீடுபார்த்து கொடுத்து உதவியாக இருந்த அவினாசி ரங்கா நகரை சேர்ந்த சவரி முத்து (54) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    ராம்சிஷ் வர்மாவிடம் விசாரித்த போது அவர் பீகாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த போது கொடுத்த ஐ.டி.யில் இருந்து அவினாசியில் போலி ஆதார் அட்டை அச்சடித்து கொடுத்தது தெரிய வந்தது.

     


    அவர் திருப்பூர் மற்றும் பீகாரில் 500-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆதார் அட்டைகளை அச்சடித்து வினியோகித்து இருக்கலாம் என தெரிய வந்து உள்ளது.

    திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிக அளவில் உள்ளது. கடந்த 2 வருடங்களாக திருப்பூரில் தங்கி இருந்த ராம்சிஷ் வர்மா பலருக்கும் உதவி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.அவருக்கு பின்னணியில் யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராம்சிஷ் வர்மாவிடம் போலி ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள் திருப்பூரில் எங்கெங்கு தங்கி உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ராம்சிஷ் வர்மா வினியோகித்துள்ள ஆதார் அட்டைகள் அரசின் சர்வரில் இணைக்கப்பட்டு பெறப்பட்டதா? என்பது குறித்து மத்திய அரசின் மின்னணுவியல் துறை துணை இயக்குனர் அசோக் லெனின் நேற்று 2-வது நாளாக திருப்பூரில் விசாரணை நடத்தினார்.

    இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் கூறும் போது, பெங்களூருவில் இருந்து வந்த ஆதார் துணை இயக்குனர் திருப்பூரில் 2 நாட்கள் விசாரணை நடத்தி சென்று உள்ளார்.

    கைதான பீகார் வாலிபர் எந்தெந்த குறியீடுகளில் இருந்து ஆதார் பதிவு செய்துள்ளார் என்ற தகவல் திரட்டப்பட்டு வருகிறது. முழுமையான தகவல் கிடைத்தால் மட்டுமே இந்த வி‌ஷயத்தில் முழு எண்ணிக்கை தெரிய வரும் என்றார். #Aadhaarcard

    திருப்பூரில் வங்க தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Aadhaarcard

    திருப்பூர்:

    பனியன் நகரமான திருப்பூரில் வெளி நாடு, வெளி மாநிலம், வெளி மாவட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி இருந்து பனியன், டையிங் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களில் வெளி நாட்டு வாலிபர்கள் சிலர் முறையான ஆவணம் இன்றி தங்கி இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் படி போலீசார் செவந்தாம் பாளையம் சாமந்த தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு அனுமதியின்றி தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த அலமின், அஸ்ரபுல் இஸ்லாம், பர்கத் உசேன், போலஸ் சந்தரா சொர்க்கர், முகமது ரோணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு உதவியதாக முகமது பாபுல் உசேன், மோமின்வார் உசேன், ரோபின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சோதனை செய்த போது போலி ஆதார் அட்டை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த அட்டையை திருப்பூரை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் அவினாசி ரங்கா நகரில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த ஆசிஷ் வர்மா என்பவர் தயாரித்து கொடுத்ததாக கூறினார்கள். ஒரு ஆதார் கார்டு தயாரிக்க ரூ. 6 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர்.

    பின்னர் கைதான 8 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வங்க தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரிக்க உதவிய புரோக்கர் ஏற்கனவே போலீஸ் பிடியில் சிக்கினார். பீகார் வாலிபர் ஆசிஷ் வர்மாவை தேடி திருப்பூர் போலீசார் அவினாசி சென்றனர்.

    ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை போலீசார் பீகார் சென்றனர்.

    அங்குள்ள நோவாலா மாவட்டத்தில் பதுங்கி இருந்த ஆசிஷ் வர்மாவை கைது செய்தனர்.அவரிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை திருப்பூர் அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர் போலி ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்த அவினாசிக்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் சோதனை நடத்தினர்.

    அங்கு கம்ப்யூட்டர், ஐ ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ஏராளமான போலி ஆதார் அட்டை இருந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    ஆசிஷ் வர்மாவிடம் விசாரித்த போது அவர் பீகாரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருவது தெரிய வந்தது. அந்த மையத்தின் பாஸ்வேர்டு மூலம் அவினாசி மையத்தில் இருந்து போலி ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்துள்ளார்.

    திருப்பூரில் வேலை பார்த்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு ஆசிஷ் வர்மா போலியாக ஆதார் கார்டு அச்சடித்து கொடுத்ததாக கூறி உள்ளார்.இவரிடம் போலி ஆதார் கார்டு பெற்றவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வர்மாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Aadhaarcard

    திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுக்க உதவிய புரோக்கரை கைது செய்த போலீசார் ஜார்க்கண்ட் வாலிபரை தேடி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமத் தோட்டத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்கதேச வாலிபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் போலி ஆதார் கார்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு கார்டு தயாரிக்க ரூ. 6 ஆயிரம் கொடுத்தது தெரிய வந்தது.

    கைதான 8 பேரிடம் விசாரித்த போது திருப்பூரை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் அவினாசியில் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வர்மா என்பவர் தான்போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து புரோக்கர் மற்றும் வர்மாவை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த வர்மா ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டார்.

    இந்த நிலையில் புரோக்கர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது திருப்பூரில் தங்கி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வர்மாதான் போலி ஆதார் கார்டு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளை தயார் செய்து கொடுத்ததாக கூறினார்.

    இதனை தொடர்ந்து வர்மாவை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படையினர் ஜார்க்கண்ட் விரைந்துள்ளனர்.

    வர்மாவை பிடித்து அவர் வைத்துள்ள கம்ப்யூட்டரை சோதனை செய்தால் தான் அவர் எத்தனை பேருக்கு போலியாக ஆதார், அடையாள அட்டை தயாரித்து கொடுத்தார் என்பது தெரிய வரும். #tamilnews
    ×