search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் சமூக ஆர்வலர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி
    X

    கும்பகோணத்தில் சமூக ஆர்வலர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி

    கும்பகோணத்தில் சாலை விதி முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

    கும்பகோணம்:

    சதன் ரைடர் என்ற சமூக நல ஆர்வலர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல மாநிலங்களில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடத்தி மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விதி முறைகளை பொதுமக்கள் கடை பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். 

    இந்த அமைப்பினர் கடந்த 1-ந்தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு இன்று (13-ந்தேதி) தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை வந்தடைந்தனர். 65 மோட்டார் சைக்கிள்களில் 65 பேர் 1260 கி.மீ. பயணம் செய்து வந்ததாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக கேட்டபோது, சாலை விதி முறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். வாகனங்களை மிதவேகத்தில் விபத்து ஏற்படுத்தாமல் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினோம். இதன் மூலம் பொதுமக்களிடம் சாலை விதிமுறையை கடைபிடிக்கும் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும் என்று கூறினர்.

    Next Story
    ×