search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாக்கடை அருகே படுத்த பெண்ணுக்கு பிரசவம்- கால்வாயில் விழுந்து பெண் குழந்தை பலி
    X

    சாக்கடை அருகே படுத்த பெண்ணுக்கு பிரசவம்- கால்வாயில் விழுந்து பெண் குழந்தை பலி

    உடுமலையில் சாக்கடை அருகே படுத்த பெண்ணுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து அந்த குழந்தை கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது சின்னவீரம்பட்டி கிராமம். இன்று அதிகாலை அந்த வழியே சென்ற சிலர் அங்குள்ள சாக்கடை கால்வாயை பார்த்தபோது பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடி அகற்றப்படாமல் இறந்து கிடந்தது.

    அந்த சாக்கடை அருகே ஒரு இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஜெய்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த சிசுவை மீட்டனர். மேலும் மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணின் அருகே ஒரு கைப்பை இருந்தது. அதை எடுத்து போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் இருந்த செல்போனை எடுத்து போலீசார் அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி துர்கா என்ற ரேணுகா (வயது 23) என்பது தெரியவந்தது.

    கர்ப்பிணியாக இருந்த துர்கா கணவருடன் கோபித்துக் கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு வந்தார். நேற்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு பதிலாக தவறுதலாக உடுமலை சின்னவீரம் பட்டிக்கு வந்து இருக்கிறார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சாக்கடை அருகே நேற்று மாலை முதல் படுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது.

    அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சாக்கடை அருகே இருந்ததால் குழந்தை உருண்டு ஓடி சாக்கடைக்குள் விழுந்து பரிதாபமாக இறந்ததது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கோவைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். #tamilnews
    Next Story
    ×