search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட்டார வளர்ச்சி அதிகாரி மகேந்திரன் சோதனை நடத்திய காட்சி
    X
    வட்டார வளர்ச்சி அதிகாரி மகேந்திரன் சோதனை நடத்திய காட்சி

    கொடைக்கானலில் சத்துணவு முட்டைகளை கடத்திய பெண்கள்

    கொடைக்கானலில் சத்துணவு முட்டைகளை கடத்திய பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவிகளுக்கு மதிய உணவு சரிவர வழங்கப்படுவதில்லை என்றும், சத்துணவில் முட்டைகள் கிடைப்பதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதனையடுத்து கடந்த 10 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் பள்ளிக்கு வந்த 2 பெண்கள் ஒரு அட்டைபெட்டியை தூக்கிக்கொண்டு வேகமாக வெளியே வந்தனர். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவர்களை கையும், களவுமாக பிடித்து அட்டைப்பெட்டியை பிரித்து பார்த்தனர். அதில் மாணவிகளுக்கு வழங்கவேண்டிய 210 சத்துணவு முட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் சத்துணவு முட்டைகளை கடத்தி வந்த அமைப்பாளர் சாந்தி உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.




    Next Story
    ×