search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    ஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    ஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஆண்மடம்:

    ஆண்டிமடம் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி செல்வராஜ் வீட்டை பூட்டி  விட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 5 லட்சம் ரொக்க பணம், 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். 

    இது குறித்து ஆண்டிமடம் போலீசார்  வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×