என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாளையில் ஓவிய ஆசிரியர் தற்கொலை
நெல்லை:
பாளை பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் சாத் ராக் சாமுவேல் (வயது 43). இவர் பாளையில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். சமீபத்தில் அவரை உக்கிரன்கோட்டை பள்ளிக்கு பணிமாறுதல் செய்தனர். அங்கு பணியில் சேர்ந்த சாத்ராக் சாமுவேல், பணி புரியாமல் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சாத்ராக் சாமுவேலை திடீர் என்று காணவில்லை. அவரது மனைவி அன்னாள், பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட பிறகும் அவருடன் பேசமுடியவில்லை. இதனால் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாளை டக்கரம்மாள்புரத்தை அடுத்த ஜோதிபுரம் காட்டுப் பகுதியில் நேற்று மாலை ஒருவர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடப்பதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் காணாமல் போன ஓவிய ஆசிரியர் சாத்ராக் சாமுவேல் என்று தெரியவந்தது.
அவர் பணிமாறுதல் செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாகவும், அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தாகவும் அவரது மனைவி அன்னாள், முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்