search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையில் ஓவிய ஆசிரியர் தற்கொலை
    X

    பாளையில் ஓவிய ஆசிரியர் தற்கொலை

    பணி மாறுதல் செய்யப்பட்டதால் வேதனை அடைந்த ஓவிய ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    பாளை பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் சாத் ராக் சாமுவேல் (வயது 43). இவர் பாளையில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். சமீபத்தில் அவரை உக்கிரன்கோட்டை பள்ளிக்கு பணிமாறுதல் செய்தனர். அங்கு பணியில் சேர்ந்த சாத்ராக் சாமுவேல், பணி புரியாமல் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சாத்ராக் சாமுவேலை திடீர் என்று காணவில்லை. அவரது மனைவி அன்னாள், பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட பிறகும் அவருடன் பேசமுடியவில்லை. இதனால் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாளை டக்கரம்மாள்புரத்தை அடுத்த ஜோதிபுரம் காட்டுப் பகுதியில் நேற்று மாலை ஒருவர் வி‌ஷம் குடித்த நிலையில் பிணமாக கிடப்பதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் காணாமல் போன ஓவிய ஆசிரியர் சாத்ராக் சாமுவேல் என்று தெரியவந்தது.

    அவர் பணிமாறுதல் செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாகவும், அதனால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தாகவும் அவரது மனைவி அன்னாள், முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×