search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே பாலாற்று சுடுகாட்டில் மணல் கடத்திய 6 பேர் கைது
    X

    ஆம்பூர் அருகே பாலாற்று சுடுகாட்டில் மணல் கடத்திய 6 பேர் கைது

    ஆம்பூர் அருகே பாலாற்றங்கரையில் சுடுகாட்டில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள சோமலாபுரம் பாலாற்றில் உள்ள சுடுகாட்டில் இருந்து மணல் கடத்தப்படுகிறது. இங்கு மணல் அள்ளுவதால் உடல்களை அடக்கம் செய்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆம்பூர் தாலுகா போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஏ.கஸ்பா பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 29), கோவிந்தன் (24), ராஜா (37), கார்த்திகேயன் (28), கோவிந்தராஜ் (56), கேசவராஜ் (38) ஆகியோரை கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×