search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி
    X

    ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி

    ரெயில் பயணத்தின் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மாவிழிபாளையம் ரெயில்வே பாலம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் மேற்கு வங்காளத்தை சோமைஹேம்பரம் (வயது 27) என்பதும் திருப்பூரில் இருந்து ஹவுரா ரெயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சோமைஹேம்பரம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×