என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேறு பெண்ணுடன் தொடர்பு - கணவருடன் சேர்த்து வைக்ககோரி 3 குழந்தைகளுடன் பெண் கதறல்
Byமாலை மலர்4 Oct 2018 12:09 PM GMT (Updated: 4 Oct 2018 12:09 PM GMT)
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 3 குழந்தைகளுடன் வந்த பெண் ஒருவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ள எனது கணவரை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே மெய்யம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. அவரது மனைவி தமிழ்ச்செல்வி(வயது37). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இன்று காலை அவர் தனது குழந்தைகளுடன் கண்ணீர் மல்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார். அங்கு அவர் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,
எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இதனை தட்டிக்கேட்டால் என்னை அடித்து உதைக்கிறார். திருமணத்தின் போது எனது வீட்டில் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்தனர்.
இதனைவைத்து வண்டி வாங்கி வாடகைக்கு எனது கணவர் ஓட்டிவந்தார். தற்போது பெண் சகவாசம் அதிகம் உள்ளதால் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் கட்டவில்லை. இதனால் நாங்கள் உணவுக்கு கூட கஷ்டப்படுகிறோம். இதுகுறித்து கணவரிடம் கேட்டால் நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள்வேன் என்று மிரட்டுகிறார்.
எனவே எனது குழந்தைகள் நலன் கருதி கணவருடன் சேர்த்து வைக்கவேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தார்.
திண்டுக்கல் அருகே மெய்யம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. அவரது மனைவி தமிழ்ச்செல்வி(வயது37). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இன்று காலை அவர் தனது குழந்தைகளுடன் கண்ணீர் மல்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார். அங்கு அவர் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,
எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இதனை தட்டிக்கேட்டால் என்னை அடித்து உதைக்கிறார். திருமணத்தின் போது எனது வீட்டில் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்தனர்.
இதனைவைத்து வண்டி வாங்கி வாடகைக்கு எனது கணவர் ஓட்டிவந்தார். தற்போது பெண் சகவாசம் அதிகம் உள்ளதால் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் கட்டவில்லை. இதனால் நாங்கள் உணவுக்கு கூட கஷ்டப்படுகிறோம். இதுகுறித்து கணவரிடம் கேட்டால் நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள்வேன் என்று மிரட்டுகிறார்.
எனவே எனது குழந்தைகள் நலன் கருதி கணவருடன் சேர்த்து வைக்கவேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X