என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கேதையுறும்பு தேவிசின்னம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம்குழந்தை துணியில் சுற்றப்பட்டு கிடந்தது.
தொப்புள் கொடி கூட கீழே விழாத நிலையில் இருந்த அந்த குழந்தை கடும் குளிருக்கு அழுது கொண்டிருந்தது. அதிகாலையில் இப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் குழந்தையின் அழுகுரலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையை தூக்கி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதிகாலை நேரத்தில் துணியில் சுற்றப்பட்டு கிடந்த குழந்தை சிவப்பு நிறத்தில் கொழுகொழுவென இருந்தது. பிறந்த குழந்தையை வீசி சென்ற கொடூரத்தாய் யார்? என ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்