என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்டமங்கலம் பகுதியில் டிராக்டர் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்27 Sep 2018 12:52 PM GMT (Updated: 27 Sep 2018 12:52 PM GMT)
கண்டமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டர் திருடிய வாலிபரை கைது செய்தனர்.
கண்டமங்கலம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் வழுதாவூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வழுதாவூர் கடை வீதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவரிடம் விசாரித்தப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அந்த வாலிபரை கண்டமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரவி (வயது 32) என்பது தெரியவந்தது.
ரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டமங்கலம் அடுத்துள்ள கலிங்கமலை கிராமத்தில் நிறுத்தி இருந்த பொம்பூர் வசந்தகுமாருக்கு சொந்தமான டிராக்டரை திருடி சென்றது தெரியவந்தது. ரவி கொடுத்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்த டிராக்டரை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X