search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    தேனி மாவட்டத்தில் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

    தேனி மாவட்டத்தில் தொடரும் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முதல்போக நெல் சாகுபடி மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது பெய்து வரும் சாரல் மழை ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர்.

    நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்தது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும் மாலை நேரத்தில் பெய்த சாரல் மழையால் பூமி குளிர்ந்தது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.40 அடியாக உள்ளது. 950 கன அடி நீர் வருகிறது. 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.96 அடியாக உள்ளது. 1144 கன அடி நீர் வருகிறது. 2170 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. வருகிற 10 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.09 அடியாக உள்ளது. 30 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 10, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 16, சோத்துப்பாறை 9, கொடைக்கானல் 22.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×