search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் சுற்றுச்சுவரை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
    X

    ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் சுற்றுச்சுவரை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    திருமுக்குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருமுக்குளம். ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால், நகரின் நிலத்தடி நீர் நன்றாக இருக்கும்.

    இதனால் திருமுக்குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் என நகர மக்கள் விரும்புவார்கள். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் வடபக்க சுற்றுச்சுவர் இடிந்தது. அங்கு தற்காலிகமாக மணல் மூடைகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் குளத்தின் நீர் வெளியேறவில்லை என்றாலும், நிரந்தர சுவர் கட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மாதர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து குளத்தின் படிக்கட்டுகளில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வாலிபர் சங்க நிர்வாகி சசிகுமார் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். #tamilnews

    Next Story
    ×