search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாங்காடு அருகே என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    மாங்காடு அருகே என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    மாங்காடு அடுத்த அம்பாள் நகரில் தனியார் நிறுவன என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளைடித்துச் சென்றுள்ளனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடை அடுத்த அம்பாள் நகர் பாலாஜி அவென்யூவில் வசித்து வருபவர் ரமேஷ். பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 13-ந்தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர். கடந்த 21-ந் தேதி ரமேசும் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடி சென்றிருப்பது தெரிந்தது. இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×