என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர்
தேனி:
தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரளி மகள் ஈஸ்வரி (வயது 22). 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாயார் வீரம்மாள் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் உறவினரான பாண்டியன் மகன் முருகன் (20) என்பவர்தான் ஈஸ்வரியை கடத்திச் சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் கடத்தப்பட்ட ஈஸ்வரியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் தேனி அரண்மனைப்புதூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (32). சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் குபேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்