search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர்
    X

    தேனி அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

    தேனி அருகே இளம் பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரளி மகள் ஈஸ்வரி (வயது 22). 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் வீரம்மாள் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் உறவினரான பாண்டியன் மகன் முருகன் (20) என்பவர்தான் ஈஸ்வரியை கடத்திச் சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் கடத்தப்பட்ட ஈஸ்வரியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதேபோல் தேனி அரண்மனைப்புதூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (32). சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் குபேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×