search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது
    X

    ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது

    கொடுங்கையூரில் ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவான பெண்ணை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
    போரூர்:

    கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். மனைவி தனலட்சுமி. இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மருந்து கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்தவர்களிடம், தான் நடத்தி வரும் ஏலச்சீட்டில் சேரும்படி கூறினார்.

    இதை நம்பி ரூ.1 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் ஏலச்சீட்டில் சுமார் 36 பேர் சேர்ந்து 2017-ம் ஆண்டு முதல் பணம் கட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மருந்து கம்பெனியில் கையாடல் செய்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட தனலட்சுமி திடீரென தலைமறைவானார்.

    இதையடுத்து ஏலச்சீட்டில் ரூ.25 லட்சம் பணம் கட்டியவர்கள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தனலட்சுமியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×