என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவண்ணாமலை அருகே இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் புதூரை சேர்ந்தவர் வாசு. ஓட்டல் தொழிலாளி. இவரது முதல் மனைவி செல்வி. இவர் களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இதையடுத்து, ஆரணியை சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகள் உமாவை (25), வாசு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் உமாவின் பிணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அக்கம், பக்கத்தினர் உமாவின் பிணத்தை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர்.
வீட்டில் இருந்த வாசு திடீரென தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து, உடனடியாக மங்கலம் போலீ சாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பார்த்தபோது, கயிற்றால் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொன்றிருப்பது தெரியவந்தது. கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. கட்டிலுக்கு அடியில் வீசப் பட்டிருந்த கயிறும் கைப்பற் றப்பட்டது.
இதையடுத்து, உமாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உமா கொலை குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கணவன் வாசுவை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்