search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருகே இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை
    X

    திருவண்ணாமலை அருகே இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை

    திருவண்ணாமலை அருகே இளம்பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Murder

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலம் புதூரை சேர்ந்தவர் வாசு. ஓட்டல் தொழிலாளி. இவரது முதல் மனைவி செல்வி. இவர் களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    இதையடுத்து, ஆரணியை சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகள் உமாவை (25), வாசு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் உமாவின் பிணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

    அக்கம், பக்கத்தினர் உமாவின் பிணத்தை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர்.

    வீட்டில் இருந்த வாசு திடீரென தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து, உடனடியாக மங்கலம் போலீ சாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பார்த்தபோது, கயிற்றால் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொன்றிருப்பது தெரியவந்தது. கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. கட்டிலுக்கு அடியில் வீசப் பட்டிருந்த கயிறும் கைப்பற் றப்பட்டது.

    இதையடுத்து, உமாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உமா கொலை குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கணவன் வாசுவை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×