search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்
    X

    வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்

    வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள மும்முனி ஒத்தவாடை தெருவில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பைப் லைன்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யபட்டு வந்தது.

    இந்நிலையில் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த 15 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கபட வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தவாசி-ஆரணி சாலையில் காலிகுடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாராமன் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×