என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்- துணை ஜனாதிபதியிடம் விசாரணை நடத்த முடிவு
சென்னை:
ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவருக்கு என்ன செய்தது? எத்தகைய சிகிச்சை கொடுத்தார்கள்? என்பன போன்ற விஷயங்களில் மர்மம் நிலவுகிறது.
ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை மர்மங்கள் நிலவுகிறது. இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணையம் சார்பில் கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவுடன் பழகியவர்கள், சிகிச்சை அளித்தவர்கள், அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடக்கிறது.
இதுவரை சுமார் 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை எல்லையை விரிவுபடுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவரது சிகிச்சை குறித்து நேரில் சென்று கேட்டறிந்த துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் இருவரையும் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா உடல் நிலையை வெங்கையா நாயுடு விசாரிக்க வந்தபோது அவர் மத்திய மந்திரியாக இருந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக இருப்பதால் அவரை விசாரணை ஆணையத்துக்கு அழைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் கவனர்ருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். இதற்கிடையே தலைமை செயலாளர் உள்பட பலரிடம் தகவல் தரும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் அழிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சுப்பையா விசுவநாதன் வரும் 25-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தகவல்கள் அளிக்க உள்ளார். அவரிடம் சசிகலா வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார். #JayaDeathProbe #ArumugasamyCommission
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்