search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    X

    பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெகதீசன் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். #PeriyarStatue #Jagadeesan #GoondasAct
    சென்னை:

    தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழாவையொட்டி திங்கள்கிழமை சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (35) திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.



    இந்நிலையில் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜெகதீசன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். #PeriyarStatue #Jagadeesan #GoondasAct
    Next Story
    ×