search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    அய்யம்பேடடை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் இருதயசாமி. இவருடைய மகன் உபகார விஜய் (வயது27). கூலி தொழிலாளி.

    நேற்று அதே ஊரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலைக்கு சென்ற அவர் குழாய் பதிப்பதற்காக கடப்பாரையை கொண்டு குழி தோண்டினார். அப்போது வீட்டில் மின் மோட்டார் பயன்பாட்டுக்காக பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த மின் ஒயரில் எதிர்பாராதவிதமாக கடப்பாரை பட்டது.

    இதில் மின்சாரம் தாக்கி உபகாரவிஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×