search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினீயர் பலி
    X

    தவளக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினீயர் பலி

    தவளக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாப்ட்வேர் என்ஜினீயர் பலியானார்.

    பாகூர்:

    புதுவை முருங்கப்பாக்கம் கணபதி நகர் நூலக வீதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் ஜெயபாரத் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் கரிக்கலாம் பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தில் ஒரு வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயபாரத் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக், ஏட்டு புவனேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து ஜெயபாரத் மீது மோதி விட்டு சென்ற வாகன டிரைவரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×