என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்15 Sep 2018 5:09 PM GMT (Updated: 15 Sep 2018 5:09 PM GMT)
விவசாயி வீட்டின் பின்பக்க கதவு உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோதிரம், தாலி சங்கிலி, நகைகள் உள்ளிட்ட 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 95). இவரது மனைவி சின்னம்மாள்(85). விவசாயியான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, தங்களது ஓடு வீட்டில் தூங்கினர்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு ராமசாமி அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அதன் வழியாக உள்ளே புகுந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோதிரம், தாலி சங்கிலி, நகைகள் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் இருந்த இரும்புபெட்டியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ராமசாமியின் மருமகள் கலைச்செல்வி புகார் அளித்தார். அதன் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிந்து நகைகள்-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 95). இவரது மனைவி சின்னம்மாள்(85). விவசாயியான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, தங்களது ஓடு வீட்டில் தூங்கினர்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு ராமசாமி அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அதன் வழியாக உள்ளே புகுந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோதிரம், தாலி சங்கிலி, நகைகள் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் இருந்த இரும்புபெட்டியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ராமசாமியின் மருமகள் கலைச்செல்வி புகார் அளித்தார். அதன் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிந்து நகைகள்-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X