என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன பட்டாசுகளை பறிமுதல் செய்ய வேண்டும்- பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
Byமாலை மலர்14 Sep 2018 12:28 PM GMT (Updated: 14 Sep 2018 12:28 PM GMT)
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வரும் பட்டாசுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிவகாசி:
ஈரோட்டில் பட்டாசு பண்டல்களை இறக்கி வைக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கார்த்திக் ராஜா, செந்தூர் பாண்டியன், முருகன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள 7 வீடுகள் சேதம் அடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மாரியப்பன், ஆசைத்தம்பி, ரத்தினகிரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சில வாரங்களாக சீனாவில் தயாரிக்கப்பட்ட 3 வகையான பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பி வாங்கும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் தற்போது இந்த ஆபத்தான சீன பட்டாசுகள் விளையாட்டுப் பொருட்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
பெற்றோர்களும் இந்த பட்டாசால் ஏற்படும் ஆபத்து குறித்து அறியாமல் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஈரோட்டில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் பட்டாசு வெடித்து 3 பேர் பலி என்று தான் செய்தி பரவுகிறது. இது உரிய உரிமம் பெற்று தொழில் செய்யும் எங்களை போன்றவர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.
சிலர் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார்கள். எங்கள் மீது உள்ள இந்த களங்கத்தை போக்க அரசால் மட்டுமே முடியும்.
ஈரோட்டில் வெடி விபத்தில் வெடித்தது எந்த வகை பட்டாசு? இதை யார் தயாரித்தது? என்று போலீசார் கண்டறிந்து தவறு நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வரும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும். தடை செய்யப்பட்ட வெங்காய வெடியை போன்ற தோற்றம் கொண்ட ‘பாப்- பாப்’ பட்டாசுகளை வெடிக்கச் செய்து அதன் ஆபத்துக்களை செயல் முறையில் விளக்கினர். #tamilnews
ஈரோட்டில் பட்டாசு பண்டல்களை இறக்கி வைக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கார்த்திக் ராஜா, செந்தூர் பாண்டியன், முருகன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள 7 வீடுகள் சேதம் அடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மாரியப்பன், ஆசைத்தம்பி, ரத்தினகிரி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சில வாரங்களாக சீனாவில் தயாரிக்கப்பட்ட 3 வகையான பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பி வாங்கும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் தற்போது இந்த ஆபத்தான சீன பட்டாசுகள் விளையாட்டுப் பொருட்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
பெற்றோர்களும் இந்த பட்டாசால் ஏற்படும் ஆபத்து குறித்து அறியாமல் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஈரோட்டில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் பட்டாசு வெடித்து 3 பேர் பலி என்று தான் செய்தி பரவுகிறது. இது உரிய உரிமம் பெற்று தொழில் செய்யும் எங்களை போன்றவர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.
சிலர் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார்கள். எங்கள் மீது உள்ள இந்த களங்கத்தை போக்க அரசால் மட்டுமே முடியும்.
ஈரோட்டில் வெடி விபத்தில் வெடித்தது எந்த வகை பட்டாசு? இதை யார் தயாரித்தது? என்று போலீசார் கண்டறிந்து தவறு நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வரும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும். தடை செய்யப்பட்ட வெங்காய வெடியை போன்ற தோற்றம் கொண்ட ‘பாப்- பாப்’ பட்டாசுகளை வெடிக்கச் செய்து அதன் ஆபத்துக்களை செயல் முறையில் விளக்கினர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X