search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உறையூரில் இரும்பு வியாபாரியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
    X

    உறையூரில் இரும்பு வியாபாரியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

    உறையூரில் இரும்பு வியாபாரியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி உறையூரை சேர்ந்தவர் ஜெகதீஸ் (44), இரும்பு வியாபாரி. இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ஜெகதீஸ் வீட்டின் அருகே சிறுநீர் கழித்தனர். இதனை அவர் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ஜெகதீசை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சோமரசம் பேட்டையை சேர்ந்த வசந்த் (23), உறையூரை சேர்ந்த கிருஷ்ணன் (24) மற்றும் யோகேஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×