search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே மில் சூப்பர் வைசர் அடித்துக்கொலை
    X

    பல்லடம் அருகே மில் சூப்பர் வைசர் அடித்துக்கொலை

    பல்லடம் அருகே இன்று காலை மில் சூப்பர் வைசர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள முக்குளத்தை சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு நாகராஜ் வேலைக்கு சென்றார். இன்று காலை அவர் கம்பெனி வளாகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர்.

    பணம் கொடுக்கல் வாங்கலில் நாகராஜ் அடித்து கொல்லப்பட்டாரா ? அல்லது முன் விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×