search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள குளத்தில் வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் பெரிய குளம் உள்ளது. நேற்று மாலை குளத்தில் ஆண் பிணம் மிதந்தது.

    தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குளத்தில் மிதந்த பிணத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபரின் இடது கையில் சிலுவை உருவில் பச்சை குத்தியுள்ளார்.

    மேலும் வலது கையில் சாரதி என்ற பெயரும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. மேலும் கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். பலியானவர் பற்றி விவரம் தெரிந்தால் 9498151550, 9498100274 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அறிவித்து உள்ளனர். #tamilnews
    Next Story
    ×