search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் 2-வது நாளாக நடந்த தட்டச்சு தேர்வில் 661 பேர் பங்கேற்றனர்
    X

    பெரம்பலூரில் 2-வது நாளாக நடந்த தட்டச்சு தேர்வில் 661 பேர் பங்கேற்றனர்

    பெரம்பலூரில் 2-வது நாளாக நடந்த தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 661 பேர் கலந்து கொண்டு தட்டச்சு செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொழில்நுட்ப துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் 4 பிரிவுகளுக்கும், சீனியர் கிரேடில் ஒரு பிரிவுக்கும் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என மொத்தம் 952 பேர் பங்கேற்றனர்.

    அதே கல்லூரியில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து தட்டச்சு தேர்வுநடந்தது. இதில் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் ஒரு பிரிவுக்கும், சீனியர் கிரேடில் 3 பிரிவுகளுக்கும், உயர் வேகத்தேர்வு 2 பிரிவுகளுக்கும், ஜூனியர் கிரேடில் 2 பிரிவுகளுக்கும் நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 661 பேர் கலந்து கொண்டு தட்டச்சு செய்தனர். 
    Next Story
    ×