search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தூர் அருகே அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து
    X

    சாத்தூர் அருகே அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து

    அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வெங்கடேஸ்வராபுரத்தில் அட்டை மில் நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    கழிவு பேப்பரை எந்திரம் மூலம் கூழாக்கிக் கொண்டிருந்த போது திடீரென உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது.

    கண்ணிமைக்கும் நேரத் தில் தீ மளமளவென பரவியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பல கோடி மதிப்பிலான அட்டைகள் தப்பின.

    இது குறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    Next Story
    ×