search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

    அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    அரிமளம்:

    அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமையாசியர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஏம்பல் சாலை, மார்க்கெட் சாலை, சிவன் கோவில், போலீஸ் நிலையம் வழியாக ஜெயவிளங்கி அம்மன் கோவில் திடலை வந்தடைந்தது.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் பள்ளி உதவி தலைமையாசிரியர் முத்து உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்ட னர். 
    Next Story
    ×