search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் தொழிலாளி வி‌ஷம் குடித்து மரணம்
    X

    வேலூர் தொழிலாளி வி‌ஷம் குடித்து மரணம்

    வேலூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் பலவன்சாத்து குப்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×