search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே டீ மாஸ்டர் தற்கொலை
    X

    நாமக்கல் அருகே டீ மாஸ்டர் தற்கொலை

    நாமக்கல் அருகே குடும்ப பிரச்சனையில் டீ மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(24). இவரது மனைவி மணிமேகலை(22). இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் பரமத்தி பகுதியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சத்தியமூர்த்தி நேற்று மாலை வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைகக்கு அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    Next Story
    ×