search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேடப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி
    X

    சேடப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி

    சேடப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் திருமேனி (வயது 38). பஞ்சாபில் ராணுவ வீரராக பணியாற்றி வந்த இவர், சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று சின்னகட்டளையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக திருமேனி மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    பெரியாற்று பாலத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த திருமேனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×