என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே காதல் பிரச்சினையில் பல் டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்7 Sep 2018 9:09 AM GMT (Updated: 7 Sep 2018 9:09 AM GMT)
வத்தலக்குண்டுவில் காதல் பிரச்சினையில் பல் டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரி அருகே வசித்து வருபவர் முஜிபூர்ரகுமான் (வயது39). மெயின்ரோட்டில் தனியார் பல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இங்கு செவிலியராக ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் எம்.வாடிப் பட்டியை சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பிரிந்து சென்றனர்.
அதன்பின்பு முருகன் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்து அந்த பெண்ணை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் முஜிபூர் ரகுமான் அவரை தடுத்து கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் முஜிபூர் ரகுமானை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X