என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் கல்லூரி மாணவர் பலி- காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
Byமாலை மலர்6 Sep 2018 11:01 AM GMT (Updated: 6 Sep 2018 11:01 AM GMT)
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானதை அறிந்த காதலி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தவமணி மகன் சீனிவாசன்(வயது22). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அஞ்சுகுழிபட்டியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று நத்தம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பள்ளி வாகனம் அவர் மீது மோதியது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதே கல்லூரியில் சீனிவாசனுடன் படித்து வந்தவர் பிருந்தாமேரி(19). திண்டுக்கல் முத்தழகுபட்டி கிழக்குதெருவை சேர்ந்த அவர் சீனிவாசனை காதலித்து வந்தார். விபத்தில் அவர் உயிரிழந்ததை அறிந்தவுடன் இன்று காலை விஷம் குடித்து கல்லூரிக்கு வந்தார்.
சிறிதுநேரத்திலேயே மயக்கமடைந்து விழுந்தார். உடனே அவரது தோழிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர்தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தவமணி மகன் சீனிவாசன்(வயது22). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அஞ்சுகுழிபட்டியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று நத்தம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பள்ளி வாகனம் அவர் மீது மோதியது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதே கல்லூரியில் சீனிவாசனுடன் படித்து வந்தவர் பிருந்தாமேரி(19). திண்டுக்கல் முத்தழகுபட்டி கிழக்குதெருவை சேர்ந்த அவர் சீனிவாசனை காதலித்து வந்தார். விபத்தில் அவர் உயிரிழந்ததை அறிந்தவுடன் இன்று காலை விஷம் குடித்து கல்லூரிக்கு வந்தார்.
சிறிதுநேரத்திலேயே மயக்கமடைந்து விழுந்தார். உடனே அவரது தோழிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர்தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X