என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லஞ்சம் வாங்கிய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்5 Sep 2018 3:54 PM GMT (Updated: 5 Sep 2018 3:54 PM GMT)
லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிவகங்கை:
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2.5.2011 அன்று தன்னுடைய காரில் காரைக்குடி அருகே உள்ள புதுவயலுக்கு சென்றார். அப்போது கார் பழுதானதால் அங்கேயே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். பின்னர் 10 நாட்கள் கழித்து புதுவயல் சென்று பார்த்தபோது, அந்த காரை சாக்கோட்டை போலீசார் கைப்பற்றி சென்றது தெரிந்தது.
இதனால் முருகன் அந்த காரை எடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது, அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை யடுத்து காமாட்சியிடம் ரசாயனம் தடவிய பணத்தை முருகன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி மற்றும் போலீஸ்காரர் சிவ முருகன் ஆகியோரை கைதுசெய்தனர்.
மேலும் இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட காமாட்சிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிவமுருகன் விடுதலை செய்யப்பட்டார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2.5.2011 அன்று தன்னுடைய காரில் காரைக்குடி அருகே உள்ள புதுவயலுக்கு சென்றார். அப்போது கார் பழுதானதால் அங்கேயே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். பின்னர் 10 நாட்கள் கழித்து புதுவயல் சென்று பார்த்தபோது, அந்த காரை சாக்கோட்டை போலீசார் கைப்பற்றி சென்றது தெரிந்தது.
இதனால் முருகன் அந்த காரை எடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது, அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை யடுத்து காமாட்சியிடம் ரசாயனம் தடவிய பணத்தை முருகன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி மற்றும் போலீஸ்காரர் சிவ முருகன் ஆகியோரை கைதுசெய்தனர்.
மேலும் இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட காமாட்சிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிவமுருகன் விடுதலை செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X