search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவட்டார் அருகே வாலிபரை தாக்கிய கட்டிட தொழிலாளி கைது
    X

    திருவட்டார் அருகே வாலிபரை தாக்கிய கட்டிட தொழிலாளி கைது

    திருவட்டார் அருகே பணப்பிரச்சினையில் வாலிபரை தாக்கிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே சுவாமியார்மடம் பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 26). இவரும் காட்டாத் துறையை சேர்ந்த ஹரிராமன் (37), முளகுமூடு பகுதியை சேர்ந்த தேவதாஸ் (46), வெள்ளியோடு பகுதியை சேர்ந்த தனபால் (40) ஆகியோரும் கட்டிட தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் 4 பேரும் கட்டிட தொழிலுக்கு சேர்ந்தே சென்று வருவது வழக்கம். நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இடையே பணப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. தன்னிடம் இருந்து வாங்கிய பணத்தை தரும்படி ரதீசிடம் அவர் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் தேவதாசுக்கு ஆதரவாக ஹரிராமன், தனபால் ஆகியோரும் பேசி ரெதீசிடம் தகராறு செய்தனர். இந்த தகராறு முற்றியதில் 3 பேரும் சேர்ந்து கட்டையால் ரெதீசை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ரெதீஷ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    தன்னை தாக்கியது பற்றி  ரெதீஷ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ஹரிராமனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×