என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டுவில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மர்ம மரணம்
Byமாலை மலர்5 Sep 2018 11:23 AM GMT (Updated: 5 Sep 2018 11:23 AM GMT)
வத்தலக்குண்டுவில் கடத்தப்பட்ட தொழிலதிபர் திருச்சி காவிரி ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு பஸ்நிலையம் பின்புறம் ஊர்காலசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லுபிள்ளை(வயது70). பெரியகுளம் சாலையில் லேத் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே வந்த நல்லுபிள்ளையை மைதடவி வசியப்படுத்தி ஒருகும்பல் திருச்சிக்கு கடத்திச்சென்றது.
பின்பு அவரிடம் இருந்த நகைமற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு வத்தலக்குண்டுவிற்கு டிக்கெட் மட்டும் எடுத்து அனுப்பி வைத்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நல்லுப்பிள்ளை மீண்டும் மாயமானார். இதனால் அவரது மகன் முருகேசன் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை. திருச்சிக்கு யாரும் கடத்தியிருக்ககூடுமோ என அங்கிருக்கும் உறவினர்களிடம் செல்போனில் விசாரித்தார்.
திருச்சி காவிரி ஆற்றில் வத்தலக்குண்டுவை சேர்ந்த முதியவர் பிணமாக கிடப்பதாக திருச்சி போலீசார் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அந்த நபர் நல்லுபிள்ளை என தெரியவந்தது.
அவரை யாரும் கடத்திச்சென்று கொலை செய்து காவிரி ஆற்றில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு பஸ்நிலையம் பின்புறம் ஊர்காலசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லுபிள்ளை(வயது70). பெரியகுளம் சாலையில் லேத் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே வந்த நல்லுபிள்ளையை மைதடவி வசியப்படுத்தி ஒருகும்பல் திருச்சிக்கு கடத்திச்சென்றது.
பின்பு அவரிடம் இருந்த நகைமற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு வத்தலக்குண்டுவிற்கு டிக்கெட் மட்டும் எடுத்து அனுப்பி வைத்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நல்லுப்பிள்ளை மீண்டும் மாயமானார். இதனால் அவரது மகன் முருகேசன் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை. திருச்சிக்கு யாரும் கடத்தியிருக்ககூடுமோ என அங்கிருக்கும் உறவினர்களிடம் செல்போனில் விசாரித்தார்.
திருச்சி காவிரி ஆற்றில் வத்தலக்குண்டுவை சேர்ந்த முதியவர் பிணமாக கிடப்பதாக திருச்சி போலீசார் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அந்த நபர் நல்லுபிள்ளை என தெரியவந்தது.
அவரை யாரும் கடத்திச்சென்று கொலை செய்து காவிரி ஆற்றில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X