என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
50 நாட்களாக 100 அடிக்கு குறையாத மேட்டூர் அணை நீர்மட்டம்
Byமாலை மலர்5 Sep 2018 11:10 AM GMT (Updated: 5 Sep 2018 11:10 AM GMT)
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் 50 நாட்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது.
சேலம்:
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது.
இந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி 100 அடியை எட்டியது. பின்னர் 23-ந் தேதி அணையின் முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஜூலை 17-ந் தேதி முதல் இன்று வரையிலான 50 நாட்களும் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6 ஆயிரத்து 394 கன அடியாக இருந்தது. நேற்று அணையில் இருந்து 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 8 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று 120.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120.09 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது.
இந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி 100 அடியை எட்டியது. பின்னர் 23-ந் தேதி அணையின் முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஜூலை 17-ந் தேதி முதல் இன்று வரையிலான 50 நாட்களும் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6 ஆயிரத்து 394 கன அடியாக இருந்தது. நேற்று அணையில் இருந்து 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 8 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று 120.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120.09 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X