search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணைக்கரை சோதனை சாவடியில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான குட்கா- பான்மசாலா கடத்திய 2 பேர் கைது
    X

    அணைக்கரை சோதனை சாவடியில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான குட்கா- பான்மசாலா கடத்திய 2 பேர் கைது

    அணைக்கரை சோதனை சாவடியில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #arrest

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரையில் குறுகிய பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இங்குள்ள 2 பாலங்கள் வழியாக செல்லும் வாகனங்கள் வேறு வாகனத்தக்கு வழிவிட முடியாது என்பதால் வாகனங்களை நிறுத்தி வைத்து அனுப்புவது வழக்கம். இந்த பாலங்களில் நான்கு சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இன்று காலை ஒரு சொகுசு கார் அணைக்கரை முதல் பாலம் வழியாக சென்றது. அதனை சோதனை சாவடி போலீசார் நின்று செல்லும் படி கூறியும் நிற்காமல் சென்றது. இதைத்தொடர்ந்து 2-வது பாலத்தில் செயல்படும் சோதனை சாவடிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 2-வது பாலத்தில் செல்ல முயன்ற சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி சென்றது. தெரியவந்தது.

    இதைதொடர்ந்து அந்த காரில் வந்த 2 பேரை பிடித்து திருப்பனந்தாள் போலீஸ் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஜவானா ரான்சி, நர்சிங் என்பது தெரியவந்தது. அவர்கள் யாருக்காக? குட்கா மற்றும் பான்மசாலாவை கடத்தி சென்றனர் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×