search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் மாநகராட்சி அதிகாரி வீட்டில் கொள்ளை
    X

    மதுரையில் மாநகராட்சி அதிகாரி வீட்டில் கொள்ளை

    மதுரையில் மாநகராட்சி-எல்.ஐ.சி. அதிகாரிகளின் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை பொன்மேனி எஸ்.வி.நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது44). இவர் மதுரை மாநகராட்சியில் காசநோய் சிறப்பு பிரிவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது அண்ணன் அதே பகுதியில் உள்ள விவேக் நகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டார்.

    அப்போது எங்கள் பகுதியில் திருட்டு பயம் அதிகமாக உள்ளது. எனவே குடும்பத்துடன் வந்து இங்கு தங்கி கொள்ளுமாறு தனது தம்பி ஜெயராஜிடம் கூறி விட்டு சென்றார். அதன்படி ஜெயராஜ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜெயராஜின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையையும் திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணன் வீட்டின் பாதுகாப்புக்காக குடும்பத்துடன் சென்று தங்கிய தம்பி வீட்டில் மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×